குட்கா’ சாப்பிட்ட9 ஆம் வகுப்பு மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 8, 2022

குட்கா’ சாப்பிட்ட9 ஆம் வகுப்பு மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சி

``` ```தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வகுப்பறையில் ‘குட்கா’ சாப்பிட்ட மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நல்லம்பள்ளி அருகே பரபரப்பு: வகுப்பறையில் ‘குட்கா’ சாப்பிட்ட மாணவன் தற்கொலை முயற்சி பெற்றோர் கண்டித்ததால் விபரீதம் . தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வகுப்பறையில் ‘குட்கா’ சாப்பிட்ட மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நல்லம்பள்ளி, தருமபரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் 9ம் வகுப்பு மாணவன் படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவன், ``` ```வகுப்பறையில் வைத்து போதை பொருளான குட்காவை சாப்பிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர், மாணவனை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். மேலும் மாணவனின் ஒழுங்கீன நடவடிக்கை குறித்து அவனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து மாணவனின் பெற்றோர், கண்டித்து பேசி யுள்ளனர். இதுபோல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருளை சாப்பிடக்கூடாது, ஓழுங்காக படிக்க வேண்டும் என்று புத்திமதி கூறினர். இதனால் மனமுடைந்த மாணவன் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தான். ``` ```தொடர்ந்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன், எலி பேஸ்டை தின்றார். இதனால் சிறிதுநேரத்தில் மாணவன் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மாணவன் மயங்கி கிடப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவனை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தொடர்ந்து டாக்டர்கள்,சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் ‘குட்கா’ சாப்பிட்ட மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நல்லம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது``` ```

No comments:

Post a Comment