தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, March 28, 2022

தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல்

``` ```

 


சென்னை,

சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். 
தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ,``` ``` காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து  ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நிலையில், வேன் மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
``` ```

No comments:

Post a Comment