அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 10, 2021

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு

  

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் , சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள் , கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 05.06.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெற இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.


சென்னை , அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி , சத்தான உணவு மற்றும் தரமான நூலகம் . காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.


இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது . அதே போன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள் , கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலைத் தேர்வுக்காக அனுமதிக்கின்றன.


2022 - ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு , பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 11-12 2021 முதல் 28.12.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


 இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் மேலும் , பயிற்சியில் சேரவிரும்புவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 23.01.2022 ( ஞாயிற்றுக் கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் . முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு.


தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

.com/img/a/

No comments:

Post a Comment