6 std Lesson plan | Click Here |
7 std Lesson plan | Click Here |
8 std Lesson plan | Click Here |
பள்ளிகளுக்கான குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி வகுப்பை நேற்று பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக 35 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், மாணவர்கள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படும்.
கரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய, இல்லம் தேடி கல்வித் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment