110 விதி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 19, 2022

110 விதி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்!


முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.முதல்வர் தனது உரையில், “தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 

சமூக மேம்பாட்டிலும், தனி மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 78 சதவீத அறிவிப்புகள், அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.எஞ்சிய அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடவும், அரசாணை வெளியிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப் பள்ளிகளில் 1050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும். அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும். 

உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.1.70 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதை அரசு வருமான இழப்பாக கருதவில்லை, மகளிருக்கான வளர்ச்சியாகவே இதை பார்க்கிறோம்.ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்கிட நடவடிக்கை எடுத்துள்ளோம். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது” என கூறினார்.

No comments:

Post a Comment