ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி: அரசு பள்ளி மாணவரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மேற்படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, October 28, 2021

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி: அரசு பள்ளி மாணவரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மேற்படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு

அரசு பள்ளியில் படித்து ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வென்ற மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவரது கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

 ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தேர்ச்சி திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் - பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார். இவர், இந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி. - ஐதராபாத்) என்ஜினீயரிங் படிப்பதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். மாணவர் அருண்குமாரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார். 

 கல்வி செலவை அரசு ஏற்கும் எளிய பின்புலத்தில் இருந்து வந்து அரசு பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருண்குமாரை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கான கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று உறுதி அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment